காதலா! காதலா? (பகுதி-28) |Kutty Story| tamil love story novels | - Kutty Story

Comments

காதலா! காதலா? (பகுதி-28) |Kutty Story| tamil love story novels |

Share This

காதலா! காதலா? (பகுதி-28)


    வணக்கம் நண்பர்களே.... நேத்து ஏன்.... ஸ்டோரி போடலன்னு கேக்குறிங்களா.... போடவே விருப்பம் இல்லைங்க.... படிக்குரிங்களா?? இல்லையானு கூட தெரியல.... அனுப்பினா அனுப்பின படி அப்டியே இருக்கு..... USERஓட என்கரேஜ்மென்ட் இருந்தா தான் ஸ்டோரி போடவே புடிக்கும்.... அட்லீஸ்ட் படிக்குறவங்களாச்சும் அவுங்களோட NAME Ah மென்சன் பண்ணி COMMENT பண்ணுங்க அப்போதான் யார்யார் ஸ்டோரிய படிக்குரிங்கனு தெரியும்..... சரி வாங்க கதைக்குள்ள போலாம்.... அன்னிக்கு எதோட கதைய முடிச்சோம்.... அழகனோட போன் மாட்டிகிச்சு.... அழகியோட போன அழகன் வாங்கிட்டு ஹாஸ்டல்க்கு போய்ட்டான்..... அதுக்கு அப்பறம் என்ன ஆச்சின்னு வாங்க பாக்கலாம்...... முந்தைய பகுதி

அழகி: சரி.... சரி.... மூஞ்ச அப்படி வைக்காத... நல்லாள உனக்கு.... செட் ஆகாது.... கொண்டுபோ  புதுசயே... எப்டி குடுக்குறனோ அப்படியே திரும்பி வரனும் ஃபோன்..... இல்லனா கொன்னே போட்ருவேன்..... பாத்துக்கோ....

அழகன்: ஐ... ஐ..... என்னோட அழகினா.... அழகிதா......

அழகி: டேய்.... டேய்.... ஃபிராடு..... ஐஸ் வைக்காத....ஒழுங்கா.... நாளைக்கு சீக்கிரமா காலேஜ்  கெளம்பி போ....

அழகன்: சரி டி கருவாச்சி ...Byee.... நைட் உனக்கு மெசேஜ் பண்ணுறேன்...... 

அழகி: அடிங்க..... ஓடுடா.... 

(அழகன் சென்றவுடன்...... என்னனு தெரில அழகி தன்னை அறியாமலே சிரிக்குறா)........

(அழகியும் அவளோட ரூம்க்கு கெளம்பி போய்ட்டா.... அழகனும் போய்ட்டான்....)


(அழகன் ஹாஸ்டல்ல  அவனோட ரூம்ல அவனோட பைல இருக்க  துணியெல்லாம் எடுத்து வச்சுட்டு இருக்கான்)...

அழகன்: கடவுளே!!!!  இந்த வேலையெல்லாம் நான் பண்ணதே  இல்ல...... இன்னும் என்னலாம் பண்ணப் போரனோ ????? தெரியல!!!!!.....

நண்பன்  (அர்ஜுன்): Excuse Me.....
 
அழகன்: யாரு??? வாங்க உள்ள.....!!!

அர்ஜுன்: இது ரூம் நம்பர் 108 தான......

அழகன்: ஆமாங்க இது 108 தான் நீங்க யார பாக்கணும்.....

அர்ஜுன்: ஹாய்!!!! நானும் இந்த ரூம்தா........ 

அழகன்: அப்படியா!!!!!..... உன்னோட பெயர்...... எந்த ஊரு நீ??

அர்ஜுன்: நான்  அர்ஜுன்...... திண்டுக்கல்ல  இருந்து வரேன்............
 
அழகன்: ஹே!!! சூப்பர் டா...... நான் தேனி...... 

அர்ஜுன்: செம்ம டா .... ஏதோ உன்ன பாத்தா எனக்கு ரெம்ப நாள் பழகுன மாதிரி இருக்கு.....

அழகன்: ஆமாடா...... நானும் சொல்லனும்னு இருந்த.....
 
அர்ஜுன்: நாளைக்கு எத்தன மணிக்கு காலேஜ் போகனும்.....

அழகன்: 8:15 க்கு காலேஜ்ல இருக்கனுமாம்......
 
அர்ஜுன்: சீக்கிரமா எழுந்து போகிறலாம்டா...............

அழகன்: ஆமாடா!!! இங்க இருக்க வாத்தியார்லாம் மோசமானவங்க..... இன்னைக்கே என்கிட்ட Id Card கேட்டு டார்ச்சர் பண்ணங்க..... என்னோட போனயும் புடுங்கிட்டாங்க..... சீக்கிரமா போய்ரலாம்டா.......

அர்ஜுன்: அடேங்கப்பா.... இப்பொவேவா.... இந்த காலேஜ வேற மாதிரி கேள்விபட்டேன்.......

அழகன்: நானும் அப்டி நெனச்சிதான் வந்தேன்....... பாத்தாதான் எல்லாமே தெரிது.....

அர்ஜுன்: சரி.... பாத்துக்கலாம்..... நாம எதுக்கும் முன்னாடியே போயிறலாம்.... எதுக்கு வம்பு.....

அழகன்: ஆமாடா....

(அழகியும் தனது அறையில் உள்ள கபோர்டில் துணியை அடுக்கி கொண்டிருந்தாள் )

அழகி: இந்த ரூம் கப்போர்ட்... எனக்கு பத்தலையே..... பக்கத்து கப்போர்டுல கொஞ்சம் வச்சிக்கலாமா???.....

ரிதம்: ஹாய்..... இது ரூம் நம்பர் 410  தான....... 

அழகி: ஆமா!!!.... 410 தான்....

ரிதம்: சூப்பர்!!!  நானும் இந்த ரூம் தான்.....

அழகி: நல்லது!!!!! நான் அழகி..... உன்னோட பெயர் என்ன??? எந்த ஊர்....
 
ரிதம்: என் பெயர்..... ரிதம், திண்டுக்கல் என்னோட சொந்த ஊரு..... நீ எந்த ஊரு??

அழகி: நான் தேனி...... ஆமா!!! உன்னேட முடி எப்டி இவளோ நீலமா இருக்கு??

ரிதம்: எங்க வீட்டு பெண்கள் எல்லாருக்கும் இப்படிதா இருக்கும்.... உங்க அம்மாக்கு முடி நீலமா இருக்குமா?????

(அழகியோட முகம்.... சட்டுன்னு மாறிடுச்சு.... அவளுக்கு அம்மா இல்லாதத நெனச்சி....) 

அழகி: நான் ... நான் ... பார்த்த ஃபோட்டோல முடி தெரியல.... ரிதம்.....

ரிதம்: என்னது??? ... ஓஓஓஓஓஓ I Am Sorry அழகி......

அழகி: பரவால விடு ரிதம்... ஆனா எங்க அப்பாக்கு முடி அதிகமா இருக்கும்.....

ரிதம்: hahahahahaha... உனக்கு கொழுப்பு அதிகம் தான்.....

அழகி: அந்த நாயும் அப்படி தான் சொல்லும்.....

ரிதம்: நாயா???? யாரு அந்த நாய்??? ....

அழகி: அந்த நாய நாளைக்கு உனக்கு காட்டுறேன்.... எனக்கு பசிக்குது மெஸ் தெறந்துட்டாங்களா??? 

ரிதம்: தெறந்துட்டாங்க அழகி.... வா சாப்பிட்டு வரலாம்.....

(இருவரும் மெஸ்க்கு போயிட்டு சாப்பிட்டு வந்தனர்.....)

(அங்கிருந்து வந்த அப்பறமா.... அவுங்களோட கதைலாம் பேசிட்டு இருந்தாங்க....)

அழகி: ரிதம்.... தூங்கலாமா??.... கண்ணு அப்டியே சொக்குது....

ரிதம்: டீ!!.... அதுக்குள்ள என்னைய முழுசா புரிஞ்சு வச்சிருக்க.... ஈஈ... எனக்கும் தூக்கம் வருது வா தூங்கலாம்.....

இருவரும் தூங்குவதற்காக படுத்தனர்..... அப்போனு பாத்து.... அழகியோட போன்ல ஒரு டிங்.... சவுண்ட்..... யாருன்னு பாத்தா..... அழகன்.....

அழகன்: ஹேய்!!!.... கருவாச்சி...... தூங்கிட்டியா....??

அழகி: டேய்!!!... என்னைய இன்னொரு தடவ கருவாச்சினு கூப்பிட்ட கொன்னே போட்டுருவேன்.....

அழகன்: அப்டிதாண்டி கூப்பிடுவேன்.... கருவாச்சி.... சாப்ட்டியா?

அழகி: நாளைக்கு வாடா உன்ன பேசிக்குறேன்.... சாப்பிட்டேன்.... நீ சாப்டியா....

அழகன்: hehehe.... நானும் சாப்பிட்டேன்.... சரி போய் தூங்கு....

அழகி: சரிடா... டாட்டா....

அழகன்: ம்ம்ம்ம்.... பாய்...... குட்நைட்....

அழகி: குட் நைட் டா......

(இருவரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு.... சென்று உறங்கினர்......)


நாளைக்கு காலேஜ்..... புது எடம்.... ரண்டு பெரும் என்ன பண்ண போறாங்களோ.... பாக்கலாம்.... மீண்டும் சில காதல் வரிகளுடன்.... சந்திப்போம்....  அடுத்த பகுதியில்...

3 comments:

Pages